முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், யாழ். ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அனலை தீவில் இடம்பெற்ற மரண வீட்டிற்கு சென்று திரும்பிய போது ஊர்காவற்றுறை இறங்குதுறையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அனலதீவில் இருந்து ஊர்காவற்றுறை கண்ணகி படகுத்துறைக்கு திரும்பிய கஜதீபன் அங்கிருந்து மற்றொரு படகில் ஏற முற்பட்டபோது காற்று காரணமாக படகு விலத்தியதால் நிலைதடுமாறி கடலில் விழுந்துள்ளார்.
உடனடியாக அங்கிருந்தவர்களால் அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இந்த எதிர்பாராத சம்பவத்தில் கஜதீபனுக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்