இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி நாடாளுமன்றில் ஆளும், எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கறுப்புச் சட்டை அணிந்துவந்து அஞ்சலி செலுத்தினர்.
பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக பாராளுமன்ற வளாகத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொண்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர்.