Wednesday 24th of April 2024 06:47:26 PM GMT

LANGUAGE - TAMIL
.
அடுத்தடுத்து ஐவர் பலி: யாழ். குடாநாட்டை அச்சுறுத்தும் கொரோனா!

அடுத்தடுத்து ஐவர் பலி: யாழ். குடாநாட்டை அச்சுறுத்தும் கொரோனா!


அடுத்தடுத்து ஐவர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்திருப்பதானது யாழ். குடாநாட்டில் கொரோனா அபாய நிலையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

தற்போதுள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் மதத் தலைவர்களுக்கும் மாகாண சுகாதார பிரிவினருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்ஆ. கேதீஸ்வரன் இவ்விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வாரத்தில் யாழ் மாவட்டத்தில் 5 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 5 இறப்புகள் பதிவாகியுள்ளது.

உண்மையிலே கடந்த வருடத்தில் வடக்கு மாகாணத்தில் கொரோனா தாக்கத்தினால் இறப்புகள் பெரிதாக இடம்பெறவில்லை.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 5 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதைவிட இலங்கையில் தற்போது புது வருட கொண்டாட்டங்களின் பிறகு கொரோனா தொற்று பரம்பல் மிகத் தீவிரம் அடையலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது.

முக்கியமாக சுகாதார அமைச்சு அது சம்பந்தமாக அச்சத்தை வெளியிட்டிருக்கின்றது. அதன் தாக்கத்தை இந்த மாத கடைசி வாரத்திலும் மே மாத முதல் இரண்டு வாரங்களிலும் அதன் தாக்கத்தை உணரக்கூடியதாக இருக்கும் எனத் தெரிவித்த அவர் பொதுமக்கள் சுகாதார-பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவதன் மூலமே இவ் அபாயநிலையில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE