யாழ். வடமராட்சி, பருத்தித்துறை-அல்வாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை பருத்தித்துறை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பருத்தித்துறை அல்வாய்ப் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் உயிரிழந்து ஐவர் படுகாயமடைந்திருந்தனர்.
இவ் விவகாரத்தில் நால்வர் இன்று பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் கொலை சந்தேகநபராகவும் மற்றைய இருவர் குழு மோதலில் ஈடுபட்டமை தொடர்பிலான குற்றத்திற்காகவும் கைதுசெய்யப்பட்டுனர்.
படுகாயமடைந்த ஐவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையிலேயே நால்வர் கைதாகியுள்ளனர்.கைதாகியவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால், யாழ் சிறைச்சாலை பாதுகாவலர்களின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, வடமராட்சி