Saturday 20th of April 2024 08:33:21 AM GMT

LANGUAGE - TAMIL
.
பொலிசார் 11 பேர் உட்பட யாழில் மேலும் 15 பேருக்கு கொரோனா!

பொலிசார் 11 பேர் உட்பட யாழில் மேலும் 15 பேருக்கு கொரோனா!


யாழ். ஆய்வுகூட்களில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பொலிசார் 11 பேர் உட்பட யாழ். குடாநாட்டில் 15 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக் கழக மருத்துவபீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகிய ஆய்வுகூடங்களில் இன்றைய தினம் (ஏப்-21) 788 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு யாழ். குடாநாட்டில் 15 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார தரப்பில் இருந்து அருவிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலுக்கு அமைவாக,

யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 333 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்ததில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். சுகாதார அதிகாரி பிரிவு - 11 பேர் (அனைவரும் பொலிசார்)

நல்லூர் சுகாதார அதிகாரி பிரிவு - 01

இதைவிட யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 455 பேருக்கு இன்றைய தினம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிடுள்ளது.

இதில் யாழ். குடாநாட்டில் மேலும் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் - 02 பேர்

கோப்பாய் சுகாதார அதிகாரி பிரிவு - 01

இன்றைய பரிசோதனை முடிவுகள் குறித்த மேலதிக விபரம் விரைவில்....


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கோப்பாய், நல்லூர்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE