யாழ். ஆய்வு கூடங்களில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த 21 பேரின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
யாழ். பல்கலைக் கழக மருத்துவபீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகிய ஆய்வுகூடங்களில் இன்றைய தினம் (ஏப்-21) 788 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு வடக்கு மாகாணத்தில் 21 பேர் உட்பட 38 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டம் - 15
யாழ். சுகாதார அதிகாரி பிரிவு - 11 பேர் (யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்)யாழ். போதனா வைத்தியசாலையில் - 02 பேர் (தனிமைப்படுத்தல் விடுதியில் உள்ளவர்கள்)
நல்லூர் சுகாதார அதிகாரி பிரிவு - 01 (சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்)
கோப்பாய் சுகாதார அதிகாரி பிரிவு - 01 (சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்)
மன்னார் மாவட்டம் - 05 (மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்)
இவ் ஐவரில் நால்வர் கொரோனாத் தொற்று அறிகுறுகளுடன் வெளிநோயாளர் பிரிவுக்கு சென்றவர்கள். மற்றையவர் மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தவராவர்.
முல்லைத்தீவு மாவட்டம் - 01 (மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு கொரோனா தொற்று அறிகுறியுடன் சென்றிருந்த இராணுவத்தை சேர்ந்தவர்)
இவ்வாறு வட மாகாணத்தில் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கோப்பாய், மன்னார், முல்லைத்தீவு, நல்லூர், வவுனியா