இலங்கையில் இன்று மாத்திரம் 578 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் 98 ஆயிரத்து 50 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 93 ஆயிரத்து 668 பேர் தொற்றில் இருந்து பூரணமாகக் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, 3 ஆயிரத்து 752 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை