தமிழ்நாட்டில் கொரோனாத் தொற்றும் பலியெடுப்பும் தினமும் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (எப்-21) மாலை வரையான நிலவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நேற்று மலையுடனான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றுதியானவர்களது எண்pணக்கை 11 ஆயிரத்து 681 ஆக பதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 10 இலட்சத்து 25 ஆயிரத்து 59 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் சிகிச்சை பலனின்றி மேலும் 53 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இதுவரை உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 13 ஆயிரத்து 258 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 84 ஆயிரத்து 361 ஆக உயர்வடைந்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு