அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணித்த வாகனங்கள் மூலமாக கடந்த நாட்களில் கிடைத்த வருமானம் 35 கோடியாக அதிகரித்துள்ளது.
தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, கடந்த 11 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்களின் மூலம், 349 மில்லியன் (34.9 கோடி) ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் கொழும்பு, கட்டுநாயக்க, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக சுமார் 12 இலட்சம் வாகனங்கள் பயணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு கடந்த 08ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையான நான்கு நாட்களில் மட்டும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்களின் மூலம், 135 மில்லியன் (13.5 கோடி) ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டிருந்ததாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.