இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் தலைவரும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தலைவருமான மகேந்திரசிங் தோனியின் பெற்றோருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தோனியின் தந்தை பான் சிங் தோனி, தாயார் தேவகி தேவி இருவரும் கொரோனா பொசிட்டிவ் என பரிசோதனை முடி வில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து ராஞ்சியில் உள்ள பிளஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவரது உடல் நிலையும் சாதாரணமாக இருப்பதாகவும், ஒக்சிஜன் அளவு நன்றாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருவரது நுரையீரலும் நல்ல நிலையில் ஆரோக்கியமாக இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா