கொரோனா முடக்க நிலை காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களை மீட்கும் செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு நாடு திரும்பவோரில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகின்றமை புதிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
அண்மைய நாட்களில் அதிகளவான எண்ணிக்கையில் இவ்வாறு நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
நேற்றைய தினம் (ஏப்-21) 62 இலங்கையர்களும்,
நேற்று முன்தினம் (ஏப்-20) 20 இலங்கையர்களும் (வெளிநாட்டினர் 2 பேர் உட்பட மொத்தமாக 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது)
கடந்த ஏப்-19 அன்று 17 இலங்கையர்களும் (வெளிநாட்டவர் ஒருவர் உட்பட 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது)
தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறு கடந்த மூன்று நாட்ளில் மாத்திரம் நாடு திரும்பியுள்ள இலங்கையர்களில் மேலும் 99 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மைய நாளில் ஒரே நாளில் அதிகபட்சமாக இவ்வாறு நாடுதிரும்பிய இலங்கையர்களில் 78 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, உலகம்