கொழும்பு துறைமுக நகரத்தை அடிப்படையாக கொண்டு சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் கொழும்பு அரசியல் பரபரத்து காணப்படும் சூழலில் சீன நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ ஃபெங் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 27ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரும் அவர் 29ம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து பல முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.