Friday 19th of April 2024 09:41:25 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ். பல்கலைக் கழக துணைவேந்தருக்கு மாரடைப்பு!

யாழ். பல்கலைக் கழக துணைவேந்தருக்கு மாரடைப்பு!


யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ். சிறி சற்குணராசா அவர்கள் மாரடைப்பின் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுத்தூபியினை நாளை காலை ஏழு முப்பது மணி அளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திறந்து வைக்க இருந்த நிலையில் இன்றைய தினம் அவர் மாரடைப்பினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரவு மாரடைப்பு பாதிப்புக்கு உள்ளான துணைவேந்தர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார். அங்கிருந்து அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு மாரடைப்பிற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் அருவிக்குத் தெரிவித்தன.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE