இலங்கை சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் பதவியிலிருந்து விசேட வைத்தியர் பாலித கருணாபேம நீக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர் பாலித கருணாபேம பணிப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஆரம்பம் முதல் மருத்துவர் பாலித கருணாபேம சுகாதாரத் துறையில் முக்கிய பங்கு வகித்தார்.
ஒரு சிறப்பு மருத்துவர் என்ற முறையில் அவர் கொரோனா வைரஸ் குறித்து ஆலோசனை வழங்கி பொதுமக்களுக்கு சிறப்பாக வழிகாட்டியதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.