மலையக தோட்ட பகுதிகளில் குளவி கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொத்மலை, வெதமுல்ல - லிலிஸ்லேண்ட் தோட்டத்தில், இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 20 ஆண் தொழிலாளர்களும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில், 16 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ள நிலையில், ஏனைய நான்கு பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.