யாழ். ஆய்வுகூடங்களில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்ட 16 தொற்றாளர்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளன.
யதழ். ஆய்வுகூடங்களில் இன்யை தினம் (ஏப்-22) 396 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாழ் குடாநாட்டை சேர்ந்த 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர். கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். சிறைச்சாலையில் - 05யாழ்.மாநகர சுகாதார அதிகாரி பிரிவு - 04 (தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்)
சாவகச்சேரி வைத்திய அதிகாரி பிரிவு - 03 (கைதடியில் இயங்கும் அரச திணைக்களத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் ஒருவர் மற்றும் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த இருவர்)
யாழ்.போதனா வைத்தியசாலை - 03 (தனிமைப்படுத்தல் விடுதியில் உள்ளவர்கள்)
கோப்பாய் வைத்திய அதிகாரி பிரிவு - ஒருவர் (தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்)
இவ்வாறு 16 பேர் இன்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்ததாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர். கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்