தமிழ்நாட்டில் இன்று 12,652 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 59 கொரோனா மரணங்களும் இன்று பதிவானதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 3,789 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவா்களுடன் தமிழகத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 இலட்சத்து 37 ஆயிரத்து 711 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 59 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவுக்குப் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 317 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 7,526 பேர் இன்று குணமடைந்து வெளியேறினர். இவா்களுடன் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 34 ஆயிரத்து 966 ஆக பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தற்போது 89 ஆயிரத்து 428 பேர் தொற்று நோயுடள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை