Friday 29th of March 2024 03:14:39 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனாவுக்கு இன்று ஐவர் பலி; 657 பேருக்கு தொற்று உறுதியானது!

கொரோனாவுக்கு இன்று ஐவர் பலி; 657 பேருக்கு தொற்று உறுதியானது!


இலங்கையில் இன்று மேலும் 5 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 80, 63, 71, 76, 77 வயதுகளையுடைய மொரட்டுவை, கண்டி, பேலியகொடை, கொட்டமுல்ல, நாராஹேன்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 ஆண்கள், 1 பெண் ஆகியோரே இன்று உயிரிழந்தவர்களாவர்.

இவற்றுடன் இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொரோனா மரணங்கள் 634-ஆக அதிகரித்துள்ளன. இதேவேளை, இன்று மொத்தம் 657 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்றைய புதிய தொற்று நோயாளர்களுடன் இலங்கையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 98,707-ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தொற்று உறுதி செய்யப்பட்ட 93,884 கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE