Tuesday 16th of April 2024 06:28:07 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கை ரீ-20 அணியில் இடம் பிடித்த யாழ். மைந்தன் வியாஸ்காந்த்!

இலங்கை ரீ-20 அணியில் இடம் பிடித்த யாழ். மைந்தன் வியாஸ்காந்த்!


இலங்கை ரீ-20 கிரிக்கெட் குழாமில் யாழ். மைந்தன் வியாஸ்காந்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இலங்கை ஜாம்பவான்கள் அணிக்கும், இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கும் இடையிலான காட்சி கிரிக்கெட் போட்டி வரும் மே-04ஆம் திகதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த காட்சி போட்டிக்கான இலங்கை ரீ-20 கிரிக்கெட் குழாமில் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவன் விஜயகாந்த் வியாஸ்காந்த் பெயரிடப்பட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்திருந்த எல்.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்று சர்வதேச வீரர்களுக்கு எதிராக சிறப்பான பந்து வீச்சு திறமையை வெளிப்படுத்தியதன ;மூலம் அனைவரது கவனத்தையும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஈரத்திருந்த நிலையில் தற்போது குறித்த போட்டியில் இலங்கை தேசிய அணி சார்பில் விளையாடும் வீரர்கள் கொண்ட குழாமில் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE