அதிகரித்த கொரோனாத் தொற்று காரணமாக மேலும் இரு பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் உத்தரவு நடைமுறைக்கு வருவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்தின் வாரியபொல பிரதேசத்திற்குட்பட்ட நிராவிய மற்றும் நிகதலுபொத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதிகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறையில் இருக்கும் எனவும் இராணவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை