யாழ்ப்பாணத்தின் வடமராட்சி தெற்கு - மேற்கு (கரவெட்டி) பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட 91 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
சில தினங்களுக்கு முன்னர் கரவெட்டி பிரதேச செயலகத்தில் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இதில் பிரதேச செயலர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் சான்றிதழ் வழங்கப்பட்ட ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலர் உட்பட 91 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சில தினங்களில் இவர்களிற்கு பி.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கரவெட்டி