Friday 29th of March 2024 02:16:12 AM GMT

LANGUAGE - TAMIL
-
இந்தியாவில் கொரோனா பலியெடுத்தோர் தொகை 2 இலட்சத்தை கடந்தது;  நேற்று 3,286  பேர் மரணம்!

இந்தியாவில் கொரோனா பலியெடுத்தோர் தொகை 2 இலட்சத்தை கடந்தது; நேற்று 3,286 பேர் மரணம்!


இந்தியாவில் கொரோனா தொற்று நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தைக் கடந்து அதிகரித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை இந்தியாவில் இதுவரை இல்லாதவாறு ஒரு நாளில் 3 ஆயிரத்துக்கு அதிகமாக கொரோனா மரணங்கள் பதிவாயின. நேற்று மட்டும் 3,286 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்று பதிவான மரணங்களுடன் இந்தியாவில் மொத்த கொரோனா உயிரிழப்புக்கள் 201,187- ஆக அதிகரித்துள்ளன. இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவில் புதிதாக மேலும் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 850 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்படி நாடு முழுவதும் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 79 இலட்சத்து 88 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் தற்போது 29 இலட்சத்து 79 ஆயிரத்து 642 பேர் தொடர்ந்தும் கொரோனா தொற்று நோயுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தியா முழுவதும் செவ்வாய்க்கிழமை முடிவடைந்த 7 நாட்களில் சராசரியாக 2,657 கொரோனா மரணங்கள் பதிவாகின.

ஒரு வாரத்திற்கு முன்பு ஏழு நாட்கள் சராசரி இறப்புக்கள் 1,490 பதிவாகியிருந்தது. இந்நிலையில் நாட்டில் சராசரி இறப்புகள் கடந்த வாரத்தில் 78% ஆக அதிகரித்துள்ளன.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE