Tuesday 16th of April 2024 06:46:32 PM GMT

LANGUAGE - TAMIL
-
4 இலட்சத்தை நெருங்கிய தொற்று;  இந்தியாவில் நேற்று 3,498 பேர் பலி!

4 இலட்சத்தை நெருங்கிய தொற்று; இந்தியாவில் நேற்று 3,498 பேர் பலி!


இந்தியாவில் கடந்த 24 மணித்திலாயங்களில் 4 இலட்சத்தை நெருங்கிய கொரோனா தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், நேற்று மேலும் 3,498 பேர் கொரோனாவுக்குப் பலியானதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள நாளாந்த தொற்று நோய் நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 31 இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்று நோயுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் 3 இலட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் இந்தியாவில் உறுதி செய்யப்பட்ட மொத்த கொரோனா தொற்று நோயாளர் தொகை 1 கோடியே 87 இலட்சத்து 62 ஆயிரத்து 976 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், நேற்று 3,498 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனா பலியெடுத்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 8 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் இதுவரை 1 கோடியே 53 இலட்சத்து 84 ஆயிரத்து 418 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 2 இலட்சத்து 97 ஆயிரத்து 540 பேர் குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நாடு முழுவதும் நேற்று வரை 15 கோடியே 22 இலட்சத்து 45 ஆயிரத்து 179 போருக்கு கோவிட்19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் இந்திய மத்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE