இந்தியாவில் இன்று காலை வரையான கடந்த 24 மணி நேரங்களில் 4 இலட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன், இதே காலப்பகுதியில் 3,523 பேர் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
நேற்று மொத்தம் 4,01,993 பேர் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் நாட்டில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 91 இலட்சத்து 64 ஆயிரத்து 969 ஆக உயர்ந்ததுள்ளது.
நேற்று பதிவான 3,523 கொரோனா மரணங்களுடன் நாட்டில் தொற்று நோயாளர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 11 ஆயிரத்து 853 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று உறுதி செய்யபட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 இலட்சத்து 99 ஆயிரத்து 988 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இதன் மூலம், நாட்டில் மொத்தம் 1 கோடியே 56 இலட்சத்து 84 ஆயிரத்து 406 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 32 இலட்சத்து 68 ஆயிரத்து 710 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் இதுவரை 15 கோடியே 49 இலட்சத்து 89 ஆயிரத்து 635 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா