அமெரிக்காவில் இருந்து அவசர மருத்துவ உதவிப் பொருட்களுடன் கடந்த 5 நாட்களில் ஐந்தாவது விமானம் இன்று இந்தியாவை வந்தடைந்தது.
இந்த விமானத்தில் 500-க்கு மேற்பட்ட ஒக்ஸிஜன் செறிவூட்டல் கருவிகள், ஒரு இலட்சம் என்-95 முக கவசங்கள் உள்ளிட்ட மருத்துவ உதவிப் பொருட்கள் எடுத்து வரப்பட்டன.
கொரோனா வைரஸ் தொற்று நோய் இரண்டாவது அலையில் சிக்கி மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா பேரிடரின் தொடக்க காலத்தில் இந்தியா உதவி செய்தது போல, இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும் எனவும் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
அதன்படி இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து அவசர மருத்துவ உதவிப் பொருட்களை வழங்கி வருகின்றது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா