Saturday 20th of April 2024 04:24:01 AM GMT

LANGUAGE - TAMIL
-
2 கோடியைக் கடந்தது கொரோனா தொற்று; இந்தியாவில் நேற்றும்  3,449 பேர் உயிரிழப்பு!

2 கோடியைக் கடந்தது கொரோனா தொற்று; இந்தியாவில் நேற்றும் 3,449 பேர் உயிரிழப்பு!


இந்தியாவில் கடந்த 24 மணி நேரங்களில் மேலும் 3 இலட்சத்து 57 ஆயிரத்து 229- பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன் நேற்று மேலும் 3,449 பேர் உயிரிழந்தனர்.

புதிய தொற்று நோயாளர்களுடன் இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்று நோயாளர் தொகை 2 கோடியே 02 இலட்சத்து 82 ஆயிரத்து 833- ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், மொத்த கொரோனா மரணங்களும் 2 இலட்சத்து 22 ஆயிரத்து 408- ஆக உயர்ந்துள்ளன.

கடந்த 24 மணி நேரங்களில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 இலட்சத்து 20 ஆயிரத்து 289 ஆக பதிவாகியது. இதனால் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 66 இலட்சத்து 13 ஆயிரத்து 292- ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 34 இலட்சத்து 47ஆயிரத்து 133- ஆக உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 15 கோடியே 89 இலட்சத்து 32 ஆயிரத்து 921 பேருக்கு கோவிட்19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE