இந்தியாவில் கடந்த 24 மணி நேரங்களில் மேலும் 3 இலட்சத்து 57 ஆயிரத்து 229- பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன் நேற்று மேலும் 3,449 பேர் உயிரிழந்தனர்.
புதிய தொற்று நோயாளர்களுடன் இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்று நோயாளர் தொகை 2 கோடியே 02 இலட்சத்து 82 ஆயிரத்து 833- ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், மொத்த கொரோனா மரணங்களும் 2 இலட்சத்து 22 ஆயிரத்து 408- ஆக உயர்ந்துள்ளன.
கடந்த 24 மணி நேரங்களில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 இலட்சத்து 20 ஆயிரத்து 289 ஆக பதிவாகியது. இதனால் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 66 இலட்சத்து 13 ஆயிரத்து 292- ஆக அதிகரித்துள்ளது.
தற்போது கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 34 இலட்சத்து 47ஆயிரத்து 133- ஆக உள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 15 கோடியே 89 இலட்சத்து 32 ஆயிரத்து 921 பேருக்கு கோவிட்19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா