இலங்கையில் தொடர்ச்சியாக எட்டாவது நாளாக ஆயிரத்தை கடந்த எண்ணிக்கையில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இன்று (மே-04) மேலும் ஆயிரத்து 150 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 826 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை