2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று வெளியாகியிருந்த நிலையில் கணிதப் பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பிடித்து புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி சாதனை படைத்துள்ளார்.
இன்று மாலை வெளிவந்த கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கணித பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி ஆறுமுகம் சுபவர்சனா சாதனை படைத்துள்ளார்.
மாவட்ட மட்டத்தில் முதலிடத்ததையும் அகில இலங்கை ரீதியில் 71வது இடத்தினையும் பெற்றுள்ளார்.
இதே பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் மாணவன் தனராஜ்-சுந்தர்பவன் பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு