Saturday 20th of April 2024 06:12:19 AM GMT

LANGUAGE - TAMIL
.
உயிரியில் விஞ்ஞானப் பிரிவில் யாழ். மாவட்டத்தில் முதலிடம்: மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி சாதனை!

உயிரியில் விஞ்ஞானப் பிரிவில் யாழ். மாவட்டத்தில் முதலிடம்: மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி சாதனை!


2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி க. கவினா மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

உயிரியல் விஞ்ஞான பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்ற அவர் 2.8677 இசட் புள்ளிகளைப் பெற்று தேசிய மட்டத்தில் 17ம் இடத்தினைப் பெற்றுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரனின் இரண்டாவது புதல்வி அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதவேளை, கல்முனை சாஹிரா கல்லூரி மாணவன் இப்ராஹிம் அன்பஸ் அகமெட் உயிரியல் பிரிவில் தேசிய மட்டத்தில் மூன்றாமிடத்தைப் பதிவு செய்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், தென்மராட்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE