கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தகப் பிரிவில் கிளிநொச்சி சென் திரேசா மகளிர் கல்லூரி மாணவி முதலிடம் பெற்றுச் சாதனை புரிந்துள்ளார்.
பரந்தன் கோரக்கன்கட்டு கிராமத்தினை வசிப்பிடமாகக் கொண்ட மகேந்திரன் தர்சிகா என்ற மாணவியே வர்த்தகப் பிரிவில் 03 பாடங்களிலும் A தரச் சித்தி பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கோரக்கன் கட்டுக் கிராமம் கல்லூரியிலிருந்து ஏழு கிலோமீற்றர் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிராமம் ஒன்றிலிருந்து நகர் பாடசாலை ஒன்றிற்கு சென்று கல்விபயின்று சாதனை படைத்துள்ளமைக்கு கல்விச் சமூகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி