Thursday 25th of April 2024 03:55:12 AM GMT

LANGUAGE - TAMIL
.
முகக்கவசம் அணியாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிகளை மீறமை: இலங்கையில் மேலும் 173 பேர் கைது!

முகக்கவசம் அணியாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிகளை மீறமை: இலங்கையில் மேலும் 173 பேர் கைது!


தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இலங்கையில் மேலும் 173 பே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகரித்து வரும் கொரோனா பரம்பலை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இவ்வாறு மேலும் 173 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை பேச்சாளரும் பிரதி காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

முகக்கவம் அணியாது நடமாடியமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஒக்டோபர்-30 முதல் கைது செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை ஐயாயிரத்தை கடந்து 5 ஆயிரத்து 248 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE