இலங்கையில் மேலும் பல புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதன் அடிப்பயைடில் 4 மாவட்டங்களில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் மஹரகம காவல்துறை அதிகாரப்பிரதேசத்திற்கு உட்பட்ட பமுனுவ கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பிலியந்தலை காவல்துறை அதிகாரப் பிரதேசத்துக்கு உட்பட்ட ஹொன்னத்தர மற்றும் தல்தர ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் கிரிந்திவெல காவல்துறை அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட குட்டிவில கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, இரத்தினப்புரி மாவட்டத்தில் எம்பிலிபிட்டிய காவல்துறை அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட பல்லேகம, உடகம, புதியநகரம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் பணாமுர காவல்துறை அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட வலல்கொட, சுதுகல, பணாமுர ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் வேவல்வத்த காவல்துறை அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட ரத்கம கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் பூவரசங்குளம் காவல்துறை அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட குருக்கள் புதுக்குளம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கொழும்பு, வவுனியா