கெஸ்பேவ பகுதியில் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 149 பேர் உட்பட கொழும்பில் நேற்று 531 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 542 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 116 பேருக்கும் தொற்றுக்குள்ளாகிக் கண்டறியப்பட்டனர்.
இன்று காலை 6 மணி வரையான 24 மணி நேரங்களில் இலங்கை முழுவதும் 1,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் அதிகளவானவர்கள் கம்பஹாவில் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, நேற்று தொற்று உறுதியான 1,914 பேரில் 54 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில், கெஸ்பேவ பகுதியில் 149, புறக்கோட்டையில் 26, பொரள்ளையில் 14, பொரலெஸ்கமுவ பகுதியில் 13, பிலியந்தலையில் 59, மொரட்டுவையில் 26, மகரகமவில் 14 பேருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் அதிக தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிலியந்தலை, மகரகம உள்ளிட்ட பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.