யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பொதுச் சந்தை சுகாதார உத்தியோகத்தர்களால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நாட்டில் தீவிரம் பெற்றுள்ள கொரோனாப் பரவல் யாழ்ப்பாணத்திலும் மிக அதிகளவில் பரவி வருகின்றது. இருந்தபோதிலும் சுகாதார நடைமுறைகளை புறந்தள்ளி
அக்கறையின்றிச் செயற்பட்டமையால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் சில நாட்களில் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக கடைப்பிடிப்பதாக சம்பந்தப்பட்டவர்கள் வாக்குறுதி வழங்கினால் மீளத் திறக்கப்படக்கூடும் என்று கருதப்படுகின்றது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், பருத்தித்துறை