மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றின் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இன்று காலை வெல்லாவெளி இலங்கை வங்கி ஊழியர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் அதில் யாரும் தொற்றாளர்களாக கண்டுபிடிக்கவில்லையென பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இதேபோன்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கும் இன்று அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய தினம் 54பேர் அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்ட நிலையில் எவரும் தொற்றாளர்களாக இனங்காணப்படவில்லையென பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இதேபோன்று போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் எழுமாறான பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் மூன்றாவது அலையிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையிலான தொடர்ச்சியான விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாதகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு