Thursday 18th of April 2024 08:46:34 PM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் காட்டுயானைகளால் பயன்தரு மரங்கள் அழிப்பு!

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் காட்டுயானைகளால் பயன்தரு மரங்கள் அழிப்பு!


கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் காட்டுயானைகளால் பயன்தரு மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு புகுந்த காட்டு யானைகள் இவ்வாறு தமது வாழ்வாதார பயிர்களை அழித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் உள்ள காணி உரிமையாளரின் வளவில் இருந்த பயன்தரு தென்னைமரங்கள், வாழை உள்ளிட்ட பயிர்களை யானை அழித்துள்ளது.

இதேவேளை அப்பகுதயில் உள்ள 20 குடும்பங்கள் வரை யானையின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளதுடன், யானை மீண்டும் தமது பிரதேசத்திற்குள் நுழைந்துவிடும் என்ற அச்சத்திலும் உள்ளனர்.

நேற்று புகுந்த காட்டு யானையை துரத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டபோதிலும், அது பயிர்களை அழித்துவிட்டு அதிகாலை 4 மணியளவிலேயே அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றதாகவும், நான்கு யானைகள் வருகை தந்ததாகவும் காணி உரிமையாளர் தெரிவிக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட திணைக்களத்தினர் கவனம் செலுத்தி பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தருமாறும், நட்டஈட்டினை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் விவசாயிகள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE