இலங்கை இராணுவத்தால் சீதுவ பகுதியில் அமைக்கப்பட்டுவரும் 1,200 படுக்கைகளைக் கொண்ட மிகப்பெரிய கோவிட்-19 சிகிச்சை மையத்தின் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளன.
அடுத்த 24 மணி நேரங்களில் இந்த சிகிச்சை மையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும். தொடர்ந்து கொரோனா தொற்று நோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவு வசதி, தனிமைப்படுத்தல் வசதிகளை உள்ளடக்கிய இலங்கையில் மிகப் பெரிய கொரோனா சிகிச்சை மையமாக இது அமையவுள்ளது.
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என அண்மையில் இடம்பெற்ற கோவிட் கட்டுப்பாட்டு செயலணிக் கூட்டத்தில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.
1,200 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையத்தை அமைக்கும் பணியில் இராணுவத்தின் சேவா வனிதா பிரிவு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்திருந்தைமை குறிப்பிடத்தக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை