கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.
நேற்று மாலை குறித்த தீர்ப்பு சபாநாயகருக்குக் கிடைத்துள்ளது என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி குறித்த தீர்ப்பு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனக் குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.