வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களில் மேலும் 44 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் கடந்த 72 மணித்தியாலங்களில் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் நேற்றைய தினம் ஆயிரத்து 895 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இவர்களில் நாடு திரும்பிய இலங்கையர்களில் 44 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதேபோன்று நேற்று முன்தினம் 42 பேரும், கடந்த மே-04 ஆம் திகதி 44 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மே-04 ஆம் திகதி வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 54 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 10 பேர் வெளிநாட்டிராகவும், எஞ்சிய 44 பேர் இலங்கையர்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த 72 மணித்தியாலங்களில், நாடு திரும்பிய இலங்கையர்களில் 130 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையின் அடிப்பயைடில் இவ்விபரம் தொகுக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை