Thursday 18th of April 2024 03:16:00 PM GMT

LANGUAGE - TAMIL
.
பிரபாஸ் படக்குழுவின் மனிதாபிமானம்: பிரமாண்ட படப்பிடிப்பு அரங்கை கொரோனா மருத்துவமனைக்கு நன்கொடை!

பிரபாஸ் படக்குழுவின் மனிதாபிமானம்: பிரமாண்ட படப்பிடிப்பு அரங்கை கொரோனா மருத்துவமனைக்கு நன்கொடை!


பாகுபலி புகழ் பிரபாஸ் கதாநாயகநாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட படப்பிடிப்பு அரங்கத்தை கொரோனா மருத்துமனையாக பயன்படுத்த ‘ராதே ஷ்யாம்' படக்குழுவினர் அனுமதி அளித்துள்ளனர்.

பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிப்பில், இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் ‘ராதே ஷ்யாம்' படம் அதிக பொருட் செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மருத்துவமனை அரங்கத்தை கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையமாக பயன்படுத்த படக்குழுவினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

அதன்படி அந்த அரங்கில் உள்ள 50 படுக்கைகள், ஸ்ட்ரெச்சர்கள், பிபிஇ கிட் உடைகள் ஆகியவற்றை தனியார் மருத்துவமனைக்கு கொடுத்து உதவி உள்ளனர்.

'ராதே ஷ்யாம்' படக்குழுவின் இந்த மனிதாபிமான செயலுக்கு பலதரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ படத்தின் வெளியீடு கொரோனா 2வது அலை காரமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE