Thursday 25th of April 2024 09:55:46 AM GMT

LANGUAGE - TAMIL
-
முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் - ஐவருக்கு எதிராக தடை உத்தரவு!

"முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல்" - ஐவருக்கு எதிராக தடை உத்தரவு!


முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் மே 18 அன்று நடைபெறவுள்ள நிலையில் அந்த நினைவேந்தலில் ஈடுபட ஐந்துபேருக்கு எதிராக பொலிஸார் தடையுத்தரவினை பெற்றுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவுசெய்வதற்கோ மக்கள் கூடுவதற்கோ முல்லைத்தீவு பொலீசார் நீதிமன்ற தடை உத்தரவினை இன்றையதினம் (13)பெற்றுள்ளார்கள்.

Covid 19 நிலையினை கருத்தில் கொண்டு 16 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் பகுதியில் எந்த நிகழ்வும் நடத்தகூடாது மக்கள் கூடக்கூடாது பொது இடத்தில் வைத்து நினைவுகூர கூடாது என்றும் இந்த தடை உத்தரவினை முல்லைத்தீவு பொலீசார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து தடையுத்தரவை பெற்றுள்ளார்கள்.

முல்லைத்தீவு பொலீஸ் பிரிவினை சேர்ந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்,காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க தலைவி ம.ஈஸ்வரி, தமிழரசு கட்சியின் இளைஞர் அணி தலைவர் பீற்றர் இளஞ்செழியன்,தவிசாளர் க.விஜிந்தன், அருட்தந்தை வசந்தன் ஆகியோரின் பெயர் குறிப்பிட்டு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

AR 418 / 21 வழக்கு இலக்கத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவினை வழங்கியுள்ளது. --


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், முள்ளிவாய்க்கால்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE