காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டிருக்கும் அளவுக்கு மீறிய தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகம் தலையிட்டு இந்த பேரவலத்தைதடுக்க வேண்டும் எனவும் அவர் தனது ருவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாலஸ்தீனம்மீது இன்றுடன் ஏழாவது நாளாக விமானங்கள், யுத்தடாங்கிகள், ஆட்லெறிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களுடன் இஸ்ரேல் உக்கிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தத்தாக்குதல்களில் இதுவரை 52 குழந்தைகள் மற்றும் 31பெண்கள் உட்பட குறைந்தது 181 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
1,225 பேர் காயமடைந்தனர் என்று ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: ம.ஆ.சுமந்திரன், இலங்கை, உலகம்