Tuesday 16th of April 2024 12:45:25 AM GMT

LANGUAGE - TAMIL
-
தாயகம், சர்வதேச நாடுகளிலிருந்து பலர் பங்கேற்கும் இணையவழி மே-18 நினைவேந்தல்

தாயகம், சர்வதேச நாடுகளிலிருந்து பலர் பங்கேற்கும் இணையவழி மே-18 நினைவேந்தல்


தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு, தாயக மற்றும் புலம்பெயர் சட்டவியலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொள்ளும் இணையவழி நிகழ்வு மே-18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த இணையவழி நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணி யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், டேபோரா கே.ரோஸ், காதி மன்னிங் உள்ளிட்ட அமெரிக்க கொங்கரஸ் சபை உறுப்பினர்கள்,மே 17 இயக்க நிறுவுனரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான திருமுருகன் காந்தி, பொத்துவில் முதல் பொலிகண்டிவரையான எழுச்சிப் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வேலன் சுவாமிகள், திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல் அடிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்கவுள்ளனர்.

மே -18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமெரிக்கா -கனடா நேரப்படி இரவு 8:00 - 9:30 மணி,

மே-19, புதன்கிழமை, இந்தியா- இலங்கை நேரப்படி காலை 5.30 முதல் 7 மணி,

மே-19, புதன்கிழமை லண்டன் நேரப்படி அதிகாலை 1 முதல் 2.30 மணி,

மே-19, புதன்கிழமை சிட்னி நேரப்படி காலை 10 மணி முதல் 11.30 வரை இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

https://us02web.zoom.us/j/81800229396 என்ற ஜூம் இணைப்பு ஊடாக இந்த இணைய வழி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முள்ளிவாய்க்கால்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE