தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்கால் மண்ணில் சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி அடித்துடைக்கப்பட்டுள்ள நிலையில்,
அங்கு சென்ற சிவாஜிங்கம் சுடரேற்றி வணக்கம் செலுத்தினார்.
முன்னதாக,
தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் என எழுதப்பட்ட பதாகைக்கு முன்பாகவும் அவர் சுடரேற்றி வணக்கம் செலுத்தினார்.
அந்தப் பதாகையில்
இலங்கை அரச படையினரால் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்களுக்கு எமது இதயபூர்வமான அஞ்சலி.
இனப்படுகொலை குற்றவாளிகளைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதி கிடைக்கவும் பரிகார நீதியாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பை சர்வதேச சமூகம் நடாத்தி, தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளுடன் கூடிய தீர்வு கிடைக்கவும், நாம் தொடர்ந்து போராடுவோம் என்று எழுதப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முள்ளிவாய்க்கால்