Friday 29th of March 2024 03:52:50 AM GMT

LANGUAGE - TAMIL
-
16 நாட்களில் 284 பேர் கொரோனாவால் பலி! 4 கர்ப்பிணிப் பெண்களும்  மரணம்!

16 நாட்களில் 284 பேர் கொரோனாவால் பலி! 4 கர்ப்பிணிப் பெண்களும் மரணம்!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மே முதலாம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நான்கு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 284 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி மே முதலாம் திகதி 9 பேரும், 2 ஆம் திகதி 9 பேரும், 3ஆம் திகதி 13 பேரும், 4ஆம் திகதி 11 பேரும், 5 ஆம் திகதி 14 பேரும், 6ஆம் திகதி 11 பேரும், 7 ஆம் திகதி 19 பேரும், 8 ஆம் திகதி 22 பேரும், 9ஆம் திகதி 15 பேரும், 10 ஆம் திகதி 26 பேரும், 11ஆம் திகதி 23 பேரும் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

அத்துடன், மே 12ஆம் திகதி 18 பேரும், 13ஆம் திகதி 24 பேரும், 14 ஆம் திகதி 29 பேரும், 15 ஆம் திகதி 20 பேரும் , 16ஆம் திகதி 21 பேரும் இவ்வாறு கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனாவால் நேற்று (16) இரவு வரை 962 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE