இலங்கையின் லக்சல மற்றும் சலுசல ஆகிய நிறுவனங்களின் தலைவரான பிரதீப் குணவர்தன, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
கொரோனாத் தொற்றுக்குள்ளாகி கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் முறை பொறியியலாளரான இவர், அரச வர்த்தக கூட்டுத்தாபனம் மற்றும் தர நிர்ணய சபை ஆகியவற்றின் தலைவராகவும் கடமையாற்றி வந்துள்ளார்.
Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை