முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்றார்கள் 131 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அடையாளம் காணப்படும் தொற்றாளர்கள் உடனடியாகவே மருத்துவ நிலையங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இன்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 131 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினமும் 20 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தமை தெரிந்ததே.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), வட மாகாணம்