பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் - மரணதண்டனைக் கைதி 'வெலே சுதா' எனப்படும் சமந்த குமாரவை தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸா சிறைச்சாலையில் இருந்து வேறு எந்தவொரு இடத்துக்கும் இடமாற்றம் செய்ய வேண்டாம் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெலே சுதாவின் தாயார் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை ஆராய்ந்த பின்னரே, மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு இன்று உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டி, தனது மகனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வெலே சுதாவின் தாயார் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மாதம் 24 ஆம் திகதி வரை வெலே சுதா வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கும் விதமாகவே மேன்முறையீட்டு நீதிமன்றம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.