கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு வெல்லாவெளியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி விவேகானந்தபுரம் கிராமஉத்தியோகஸ்தர் பிரிவில் இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு மார்பு வலியென சென்றவர் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அனைத் தொடர்ந்து வெல்லாவெளி பிரதேச பொதுச்சுகாதார வைத்தியருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் தொற்று ஏற்பட்டவரின் குடும்பத்துக்கு அன்ரிஜன் பரிசோதனை மேற்கொன்ட போது தாய் மற்றும் பிள்ளைக்கு தொற்று இருப்பதாக இனங்கானப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து சுரவணையடியூற்று விவேகானந்த புரம் பகுதியில் அக்குடும்பத்துடன் சேர்ந்ததாக இருந்த 06 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு