கொரோனாப் பரவலின் தீவிரம் அதிகரித்துவரும் நிலையில் மீண்டும் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு நடைமுறைக்கு வரவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி இரவு 11 மணி தொடக்கம் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை குறித்த பயக்கட்டுப்பாடு நடைமுறைக்கு வரும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
25 ஆம் திகதி அதிகாலை விலக்கிக் கொள்ளப்படும் சமூக முடக்கலானது மீண்டும் அதே நாள் (மே-25) இரவு 11.00 முதல் மே-28 அதிகாலை 04.00 மணி வரையிலும் தொடரும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற கொரோனாத் தடுப்பு செயலணிக் கூட்டத்தின் போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை